articles

மதுரை முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு உணவுத் தொகை உயர்வு

சென்னை, நவ.2- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும்  உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப்  படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களின் உணவுக்கான உதவித் தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தி யுள்ளது.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாடு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி அறிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உணவுத் தொகை ரூ.1,000-ல் இருந்து  ரூ.1400-ஆகவும், கல்லூரி மாணவர் களுக்கான உணவுத் தொகை ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் உயர்த்தி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.800 கோடி மதிப்புள்ள  ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சென்னை,நவ.2- சென்னை கிண்டியில் கத்திப்பாரா அருகே ரூ.800 கோடி மதிப்புள்ள நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.செங்கப் பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார்  நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டறியப் பட்டது. குத்தகைக்கு இடத்தை பெற்று பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுவரை எந்தவிதமான குத்தகை பணமும், வாடகையும் தரப்படவில்லை.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தர வின் பெயரில் பல்லாவரம் வட்டாட்சி யர் ஆறுமுகம் தலைமையில் வருவாய்  துறையினர் காவல்துறை பாதுகாப் புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகளை வைத்தனர். ஆக்கிரமிப்பு நிலத்தில் இயங்கி வந்த  அரசு உடைமை வங்கி உட்பட 30 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடம் சுமார் 800 கோடி  ரூபாய் மதிப்புடையது என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவ.9,10,11 இல் கண்டெய்னர் லாரிகள் சென்னை வர தடை

சென்னை, நவ.2- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்வது வழக்கம்.இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டு மல்லாது, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவ. 9, 10, 11 ஆகிய நாட்க ளில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகள் இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னைக்குள் வெளி யூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய  நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.இந்த சமயத்தில் நகருக்கு வெளியில் தேசிய  நெடுஞ்சாலைகளை ஒட்டி, கண்டெய் னர் லாரிகள் நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இடங்களை ஒதுக்க காவல்  துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்  சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.  இவ்வாறு அவர் கூறினார்.